Friday, March 14, 2014

என்னை உயிரோடு புதைத்து கொன்றுவிடு..!

அந்த
ஒரு நொடி முதல்..
என்னை
எனக்கே
மீட்டெடுக்க முடியவில்லை...!

வலிக்கும்
வார்த்தைகளை
வாழ்க்கையில்
பலமுறை
சந்தித்து
சங்கடம்
சந்தித்தது..
சகஜம்தான்..!

ஆனால்..

வார்த்தை தராத வலி..
உன்
நிராகரிப்பும்..
உதாசினமும்..
அலட்சியமும்..
அணுவை துளைத்து
ஒவ்வொரு அணுவிலும்..
அணு அணுவாய்
சித்திரவதை செய்து கொண்டே
என்
வாழ்நாள் முழுவதும்
தொடர்ந்து
துளைத்து கொண்டே இருக்கும்..!

இந்த நிஜம்
எனக்கு புதியது..
அறிமுகமி ல்லாதது...!

நடந்து வந்த
இனிமையான நேரங்களையும்..
கடந்து வந்த
சுகமான தருணங்களையும்...
அனுபவித்த
சுகங்கள் அத்தனையும்..
பேசிய..கழித்த
சந்தோசங்களையும்...
தொட்டு தீண்டி..
எல்லை மீறிய..
அதிசயங்களையும்..
நெருங்கியே இருந்த..
அருகாமையின் அனுபவங்களும்...
உன் செய்கையால்..
செயலிழந்து..
நொறுங்கி...
போனது
இன்னமும் சீராகவில்லை..!

எங்கும்..
எதிலும்..
எப்போதும்..
அந்த கணம் மட்டுமே
நெஞ்சில் கனமாகிறது.. !
ரணமாகிறது..!

வாழ்க்கையே
மரண வேதனை
அனுபவம்..அடைந்து
தொடர்கிறது..!

இந்த நிலை
உன்னால் மாறலாம்..!
மீண்டும்
நீ
நீயாக
எனக்கு
சுகம் தரலாம்..!

நீ தந்த
இந்த
கொடூர காயங்கள் கூட
ஆறி போகலாம்..!

ஆனால்

நினைவு படுத்தி..
என்ன
உயிரோடு
கொன்று போகும்..
நீ
நிரந்தரமாக்கிய
வடுக்களை
என்ன செய்ய முடியும் ?
என்ன செய்ய போகிறாய்..!

ஒன்றை மட்டும் செய்..!

மீண்டும்
என்னை வதைத்து
சந்தோசம் அடையும்
ஆசைவாந்தால்..
என்னை
உயிரோடு புதைத்து
கொன்றுவிடு..!

அப்புறம்
நீ
நினைப்பதை
நடத்தி கொள்..
கொல்...!

எனது பெயர்!!!!

என்னை நானே
மதிப்பிட்டு கொண்டேன்... !
எனது சந்தோஷம்..
என்னுள் இருக்கும்
எதனால்?

முக வசீகரம் ,,,, !!

இல்லை இல்லை
நேற்றைய முகம்
இன்று இல்லை !
இன்றைய முகம்
நாளை இல்லை ... !

பழகி மகிழ்விக்கும்
எனது இயல்பா?...

அதுவும் இல்லை...
பல சமயம்
சோகத்தில் மூழ்குகிறேன்.. !
சில சமயம்
ஏக்கத்தில் ஏமாறுகிறேன்...!
மொத்தத்தில்
கோபத்தில்
எல்லாம் இழக்கிறேன்...!!

எது
எனக்கு சொந்தம்?...

எனது தாயா?
தாரம் வந்ததும்
தாய்
இரண்டாம் பட்சம்.....!!.

தாரமா?...
மகள் பிறந்தவுடன்
தாரம் கூட
அடுத்தது தான்..... !!!

எனது புகழ்...
எனது செல்வம்...
எனது அந்தஸ்து....
எனது பதவி....
எதுவுமே
எனக்கு சொந்தமானது இல்லை.... !!!

எனக்கென்ற
சொந்தம் எது?????
யோசித்தேன்.......... ,,,
யோசித்தேன்........ ,,,
யோசித்தேன்....... ,,,
என்னை
அழைக்கும் குரல்
கேட்டவுடன் தெளிந்தேன்..... !

பிறந்தது முதல்... ,,
வளர்ந்து
வாழும் வரை
மாறாதது
என்னை விட்டு
போகதது... ,,
எனக்கான அடையாளம்
எது
என தெரிந்தேன்... புரிந்தேன்… !

எனது பெயர்!!!! (SHAFI)

வாழும் போது மட்டும் அல்லாமல்
வாழ்த்து முடிந்த பிறகும்
நிலைத்து வாழ்வது
எனது பெயர் ஒன்று
மட்டுமே !!!!

Wednesday, March 12, 2014

இன்றைய நிஜம்.. இனிமை..!

நாளைய நிகழ்வுகளை..
கற்பனை செய்து..
கலங்கி...
கவலைப்பட்டு..
இன்றைய சந்தோசங்களை..
ஒதுக்கி..
ஓரம் கட்ட வேண்டாம்..!

நேற்றைய..சம்பவங்கள்..
உங்களுக்குள்
இன்று
என்ன உணர்வுகளை
உணர்த்துகின்றன...
ஏறக்குறைய
மறந்தும் இருக்கலாம்..
மரத்தும் போய் இருக்கலாம்...!

அதே நிலை தான்
நாளை
நமக்கு நடப்பதும்..!
ஏதோ ஏதோ
கற்பனைகள்..
அவநம்பிக்கைகள்..
மதிப்பீடுகள்..
உங்களுக்குள் வளர்த்து..
இன்றைய நிஜங்களை..
நிர்மூல படுததவேண்டாம்..!

சந்தோசம் கொண்ட உணர்வுகள்..
உங்களுக்குள் வரும்
அந்த நொடியை
உங்களை
ஆட்கொள்ள விட்டுவிடுங்கள்..!

வழி மாற்றி..
திசை மாற்றி..
நாளைய கற்பனைகளை..
நேற்றைய..கழிவுகளை..
கலக்க விட்டு...
இன்றைய..
மகிழ்வுகளை..
சிதைத்து
சின்னாபின்னமாக்கி
சீறழித்து விட வேண்டாம்..!

நேற்றும் இன்றும் நாளையும்..
நீங்கள் மட்டுமே
கடந்து வந்திருக்கலாம்..
உங்கள் உணர்வகளோ..
உள்ளமோ..
அனுபவித்து..
அதை
அந்தக்கணமே
அழித்து..
ஒழித்து..
புதைத்து..
மீண்டு
சந்தோசங்களை மட்டுமே
அனுபவிக்க
இன்றும்
மீண்டும் ஜனித்திருக்கலாம்..
அதை
கொன்று ..
நாளை
சுகபிரசவம் நடக்கும்
என சமாதானம்
செய்து கொள்ள வேண்டாம்..!
நேற்றை..
முழுவதுமாக
துடைத் தெரியுங்கள்...
நாளையை..
முளையிலேயே..
கிள்ளி எறியுங்கள்...

பிறகென்ன
இன்றைய நிஜம்..
இனிமையை..
இப்போது மட்டுமல்ல..
எப்போதும்..
உங்களுக்கு மட்டுமல்லாமல்
உங்களை சுற்றியும்..
ஊற்றாய்...
வாழ்ந்து கொண்டிருக்கும்..!

நீங்களும்
சுகமாய் வாழ்க்கை
தொடர்ந்து கொண்டிருப்பீர்கள்...!

Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

நினைத்து பார்க்கிறேன்..!
ஒவ்வொரு நொடியிலும்...
நீ மட்டுமே..
என் வாழ்க்கை...முழுவதும்..!

பிரசவித்த
முதல் கணம்..
என்
கண்ணீரை துடைத்தாய்...
உன் வலிகளை
மறந்து
என்னை மகிழ்வித்தாய்..
நீ
என் தாய்
என்றாலும்
நீ  பெண்..!


விட்டு கொடுத்தது..
உனக்கே
உரித்தான ஒன்று...
எனக்கு பிடிக்கும்..
அது உனக்கும்
நிரம்ப பிடித்திருந்தாலும்...
முழு மனதோடு
எனக்கு தரும்
அந்த ஒவ்வொன்றும்..
என்
தங்கையின் அடையாளம்
என்றாலும்
நீ பெண்...!

இளமைக்கே
உரித்தான..
குறும்புகள்..
வரம்பு மீறும்போதும்
பேசிய நேரங்களில்..
பார்வைகள்
எல்லைகள் மீறி
உன் உடலை மேய்ந்ததும்..
என்னை விட
உனக்கு நன்றாகவே
தெரியும்..புரியும்..!
எப்போது சமயம்
கிடைத்தாலும்
உன்னை சாய்க்கலாம்..
என்பதே
என் குறிக்கோள்...
ஆனாலும்
உன்
தோள் தந்து
என் தோல்விகளை
தடுத்த...
நீ தோழி 
என்றாலும்...
நீ பெண்...!

நடைமுறைக்கு
சாத்தியமில்லாத..
கண்டிப்புகள்...
செயல்முறைக்கு
ஓத்துவராத கட்டளைகள்...
தன்..சுகம் மட்டுமே
அவசியமாக்கும்..
ஆணதிக்க
அசிங்கங்கள்..!
பிற
ஆண்களிடம் பேச
ஏன்
பார்த்தாலும் கூட  ..
சந்தேகம்..வளர்த்து..
கற்பை
களங்கபடுத்தினாலும்..
உடம்பெல்லாம் ..
காயபபடுத்தினாலும்..
மனம் முழுவதும்
என்னையே..
வணங்கும்
நீ என் காதலி
என்றாலும்
நீ பெண்...!

உன் விருப்பு..
வெறுப்பு..
ஆசை..
எதிர்பார்ப்பு..
எல்லாவற்றையும் புதைத்து...
என் மனதோடு..
உன் மனதை
இணைத்து
புனிதமான உறவு
என
நீ வாழ்க்கை
தொடங்கினாலும்..
என் வக்கிரங்களையும்..
அசிங்கங்களையும்..
இறக்கி வைக்கும்
வடிகால்..நீ
என தெரிந்தும்..
முழு மனத்தோடு
என்னையே
வணங்கி வாழும்
நீ என் மனைவி
என்றாலும்..
நீ பெண்..!..

எத்தனை அவதாரம்
எத்தனை ஜன்மம்..
எத்தனை பிறவி
எடுத்தாலும்..
ஆணுக்கு அடங்கியவள்
பெண் என்ற
இலக்கணம்
உடைத்தெறியும் போது...

மகளிர் தினம்
கடமைக்காக கொண்டாடும்
நிலை மாறி
பெண்மையை ..
வழிபடும் தினம்..
என
வரலாறு படைக்கும்...!

அது வரை
இன்று
ஒரு நாளாவது..
பெண்மையை ..
உணர்ந்து..
மகளிர்
கொண்டாட
வாய்ப்பு தருவோம்..!!

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

Wednesday, February 26, 2014

காக்கவைக்க தொடங்கி விட்டேன்...!


நீ
காத்து
கொண்டிருக்கும்போதுதான்
என் அவசியம்
எனக்கே புரிகிறது...!

மணிக்கணக்காய்..
உன் மூச்சின்
அரவணைப்பில்...
நான் பேசிக்கொண்டிருந்தது...
உனக்கு
எப்படி
நினைவில்லாமல் போனது...!

விட்டு வந்த
நொடி முதல்..
நீ கேட்கும்
ஒற்றை சொல்..

"எப்போ வருவ..?"

அதுவும்
கொஞ்சம் கோபம்..
நிறைய தாபமுடன்...!

நெருங்கி இருக்கும் போது
நீ
உணர்த்திய
காதலை விட..
விலகி இருக்கும் போது
உருகும்
உன் காதல்
எனக்கு
விழிகளில் ஈரததையும்..
நெஞ்சத்தில்..ஏக்கத்தையும்...
நினைவுகளில்
உன்னை மட்டுமே..
செதுக்கி..போகிறது...!

என்
ஒவ்வொரு நொடியும்..
நீ மட்டுமே..

என்னை சுற்றி..
நடந்த நிகழ்வுகளை..
விசாரித்து பார்..!
பிரமித்து போவாய்..!

எதை தொடங்கினாலும்..
நீ வேண்டும்
என புலம்பியதும்...!

எதை முடித்தாலும்
நீ வேண்டும்
என துடித்ததும்...

எது நடந்தாலும்
நீ இருக்க வேண்டும்
என ஏங்கியதும்...!

உனக்கு
தெரியாமல் இருக்கலாம்...

ஆனால்
உன் மனது
உணர்ந்து
உருகி
அனுபவித்து கொண்டே
இருந்திருக்கும்..!

நேரம் ஆக..ஆக..
உன் கோபமும்..
ஏமாற்றமும்..
என் மேல்
பாய காத்திருந்தது..
எனக்கும் தெரியும்..!

நேரம் கடந்து வந்தேன்..
ஒரு நொடி பார்வை..
உன் சுகத்தை
எனக்கு
அனுபவிக்க வைத்தது..!

அருகில்
நெருங்கினாய்..
தண்டனைக்காக
எதிர்பார்த்து காத்திருந்தேன்..!

என் முகத்தை
நிமிர்த்தி
என் உதடுகளில்..
தண்டனை தந்தாய்..!

இப்போது
உன் பெண்மை
எனக்குள் கூசசமாய்!..

என் ஆண்மை
உன்னிடம் எகத்தளமாய்...!

அதனால் பார்..
உன்னிடம்
தண்டனை பெற..
உன்னை மீண்டும்

காக்கவைக்க
தொடங்கி விட்டேன்...!

Thursday, February 20, 2014

உங்களை முறியடிக்க.. யாராலும் முடியாது...!

நம்பிக்கை..
இந்த
ஒற்றை சொல்லில்
உயிர் உள்ளது
என்பதை விட ..
நம் உயிரே..
நமது நம்பிக்கை
என வாழ்க்கையை
தொடங்குங்கள்..
தொடருங்கள்..!

இரு வகை
நம்பிக்கை
எல்லோரும் அறிந்தது..!

நாம்
பிறர் மீது வைக்கும்
நம்பிக்கை..!

நம் மீது
பிறர் வைக்கும்
நம்பிக்கை..!

நாம் வைத்திருக்கும்
நம்பிக்கை பொய்த்து போனால்..
மனவருத்தம்
உயிர் போகும்
வலி கொடுக்கும்..!

நகரும் காலமே
மருந்தாகி
மறந்து போக...
செய்து விடும்..!

ஆனால்
பிறர்
நம் மீது
வைத்திருக்கும்
நம்பிக்கை..
கொஞ்சம் தடுமாறினால்...கூட..
மனவலி..
மரணம் தாண்டியும்
வதையாய் தொடரும்..!

நமது நம்பிக்கை..
நமது எதிர்பார்ப்பு மட்டுமே..
அப்படியே நடக்க வேண்டும்
என
கட்டாயம் கிடயாது..!

நம் மீது
வைத்த நம்பிக்கை..
முழுக்க..முழுக்க..
நம்மில் மட்டுமே பொறுப்பு..!

எண்ணியவர்களை
குற்றம் சொல்வதை விட..
உங்களின்
ஏதோ ஒரு செய்கை..
எப்போதோ..
எங்கேயோ
அவர்களுக்கு..
குறையாய்..
நிராகரிப்பாய்..
அவமதிப்பாய்..
அனுபவிக்க பட்டிருக்கும்..!

சமாதானம் செய்து
சரி செய்து...
நழுவுவதை விட...
முழு மனதோடு
மன்னிப்பு கேட்டுகொள்ளுங்கள்...!

மன்னிப்பு மட்டுமே
ஈடாகாது..
அவர்களின் நம்பிக்கை..
உங்கள் மேல்..
உறுதிப்படும் வரை..
அமைதியாய்..
தொடருங்கள்..!

அவர்களின்
எண்ணம் தவறு
என
ஒரு போதும் வாதாட தீர்கள்....
எண்ணங்களை
அவர்களுக்கு தந்ததே..
நீங்கள் தான் ...
இதை..
உளபூர்வமாக
ஒததுக்கொள்ளுங்கள்..!

ஆக..
நமது நம்பிக்கையை விட..
நம் மீது
பிறர் வைத்த..
வைக்கும் ..
வைக்க போகும் ..
நம்பிக்கை மட்டுமே..
நமக்கு
நிலையான
நிம்மதியான..
வாழ்வு தரும்..
என முடிவெடுங்கள்..

உங்களை
முறியடிக்க..
யாராலும் முடியாது...!

Thursday, February 13, 2014

எல்லா நாளும் காதலர் தினம் தான்...!




சப்தம் அடங்கிய
பின்னிரவில்..
மெல்லிய ஓசை
ஆழமாய்
பதிந்து போகிறது..!
அது
உன் சிரிப்பா..
சிணுங்கலா...
புரிந்தும்
புரியாமல் நான்..!

என்
கை போர்வைக்குள்
பலமுறை
நீ
அடங்கி இருந்தாலும்..
உன்
கண்ணீர் துடைத்து..
கன்னங்கள் தொட்ட
அந்த நொடி சுகம் ..
காலம் கடந்தும்..
நமக்குள் வாழ்ந்து
நம் காதலை
வாழவைத்து
கொண்டே இருக்கும்...!

நிஜத்தில்
என்
நெஞ்சொடு
நொடி நேரம் கூட
விட்டு விலகாத நீ..
என்னையே
தொட்டும்
தொடர்ந்தும்..
படர்ந்தும்
இணைந்தும்..
பிணைந்தும்..
அருகிலே
அணைத்து..
வாழ்ந்து கொண்டு
இருந்தாலும்..
புகைபடம் எடுத்த
அந்த நொடி பொழுதில்..
என் அருகில்
தொட்டும் தொடாமல்
நெருங்கி நின்று
நான் உனக்கானவன்..
என உறுதியுடன்
சிரித்த அந்த கணம்..
எனக்கு மட்டுமே புரியும்..!

உன்
செல்ல சீண்ட ல்கள்...
யாருமே இல்லாத
நேரங்களில்..
உன்..
எல்லை மீறும்..
தீண்டல்கள்..
எனக்கு கூட
நாணமும்
வெட்கமும் உண்டு
என
தெரியபடுத்தியது...!

நீ
என் அருகில்
நெருங்கும் போது
நானும் சிவக்கிறேன்...!

எதர்க்க்காக
தனியாக
ஒரு நாளில்
காதலர் தினத்தை
கொண்டாட வேண்டும்..?

காதலை புரியாதவர்களுக்கு
வேண்டுமானால்
காதலர் தினம் தேவை..!

உன்னையும்
என்னையும் போல்
காதலை புரிந்து கொண்டு..
காதல் புரிபவர்களுக்கு.. ..
வாழும் போதும்..
வாழ்ந்து முடிந்த போதும்..
எல்லா நாளும்

காதலர் தினம் தான்...!